குருந்தி விகாரையின் விகாராதிபதி வருகையால் பதற்ற நிலை!

Date:

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது.

குருந்தி விகாரையில் 03 நாட்களுக்கு ரதன சூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகளும் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்காக பக்தர் குழுவினர் இணைத்துள்ளனர்.

அங்கு, சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முயன்ற போதும் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த பகுதிக்கு வருகைதந்த குருந்தி விகாரை விகாராதிபதியின் வருகையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆவேசமடைந்த தமிழ் மக்களை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...