சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியிருந்த 54 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Date:

வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை அந்நாட்டு இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

அதன்படி, குறித்த 54 பேரும் இன்று காலை 6.45 மணியளவில் குவைத் நாட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய கட்டணத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்கள் தங்கள் கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.

குறித்த குழுவில் 53 பெண் வீட்டுப் பணியாளர்களும் ஒரு ஆண் பணியாளரும் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மீதமுள்ளவர்கள் பொலன்னறுவை, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் தாம் ஒப்பந்தம் செய்த பணியிடங்களை விட்டு குவைத் நாட்டில் வேறு இடங்களில் அதிக ஊதியத்திற்கு நீண்ட நாட்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

பின்னர், சுகவீனம், இலங்கையில் வசிக்கும் அவர்களது குடும்பங்களில் எழும் பிரச்சனைகள், வயது வரம்பு மீறல் போன்ற காரணங்களால் இலங்கைக்கு திரும்ப எண்ணி குவைத் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர்.

தூதரக அதிகாரிகள் குவைத் அரசின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அந்நாட்டு பொலிஸார் மற்றும் நீதித்துறையுடன் இணைந்து தற்காலிக விமான அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து, அந்த நாட்டிலிருந்து இலங்கையர்களை நாடுகடத்தி இந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...