சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Date:

ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 5,6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கட்டாயம் பாராளுமன்ற அமர்வில் சமூகமளிக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வர வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வட்ஸ் அப் மற்றும் தொலைபேசிகளுக்கு தகவலை அனுப்பி நிலைமையை விளக்கியுள்ளது.

மேலும் வெளிநாடு அல்லது கொழும்புக்கு வெளியில் செல்வதை இந்த திகதிகளில் தவிர்க்குமாறும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை...

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...