நாட்டில் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு!

Date:

நாட்டில் சுமார் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டின் முட்டைத் தேவையில் மூன்றில் ஒரு பங்கையே தற்போது இறக்குமதி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 85 இலட்சம் முட்டைகள் தேவைப்படுவதாகவும், அதில் சுமார் 55 இலட்சம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், சுமார் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

” நாளொன்றுக்கு சுமார் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், நாளொன்றுக்கு 10 இலட்சம் அல்லது தேவையில் மூன்றில் ஒரு பங்கையே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டில் வருடாந்தம் 2,80,000 டன் கோழி இறைச்சிக்கு தேவை உள்ளது, மாதாந்தம் 20,000 டன் கோழி இறைச்சி நுகர்வு செய்யப்படுகிறது.

நாட்டில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய கோழி இறைச்சி உற்பத்தி இல்லை என்பதால் அவற்றையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மாதாந்தம் 22,000 டன் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், 2023 ஆம் ஆண்டளவில் அது 17,000 டன்னாக குறைவடைந்த காரணத்தினால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் நுகர்வோரை சுரண்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் சந்தையில் ஓரளவு சமநிலையைப் பாதுகாத்து நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்தியாளர்கள், சந்தை நடத்தை மற்றும் நுகர்வோரின் தேவைகளுக்கு இடையில் சமநிலை ஏற்படும் வகையில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அது அமைச்சரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்படாது ” எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...