மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த மாணவி: நீதிமன்றத்தின் உத்தரவு

Date:

மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கெக்கிராவ நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், மாணவி தொடர்பில் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த 14 வயது மாணவி தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலைக்கு முன்பதாக போக்குவரத்து கடமையில் ஈடுக்கப்பட்டிருந்த பொலிஸார் மாணவி மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளிப்பதை கண்டறிந்துள்ளனர்.

பொலிஸாரின் தற்போதைய விசாரணையில் மாணவியின் தாயின் இரண்டாவது கணவரின் தந்தையே இவ்வாறு மது அருந்துவதற்கு பழக்கப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...