வறட்சியால் நேர அடிப்படையில் நீர் விநியோகம்!

Date:

நிலவும் வறட்சியான நிலையை கருத்திற் கொண்டு 69,220 வாடிக்கையாளர்களுக்கு நேர அடிப்படையின்  கீழ் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி குறிப்பிடுகையில், நேர அடிப்படையில்  நீர் விநியோகிக்கப்படும் சந்தர்ப்பங்களில், தேவை அதிகரிக்கும் போது, ​​குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியான நிலை தொடருமானால் தற்போது ஆபத்தில் இல்லாத நீராதாரங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என அனோஜா களுஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் மஹரகம உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 08.00 மணி முதல் நாளை அதிகாலை 02.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை, கட்டுபெத்த மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

மின்சார சபையின் உயர் அழுத்த மின் அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதால் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...