EPF தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!

Date:

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள் குறைக்கப்படுவதினால் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, அரசாங்க பிணையங்களில் முதலீடு செய்யும் போது அதற்காக செலுத்தப்படும் வட்டியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வழங்கப்பட்ட அனைத்து பத்திரங்களையும் மீண்டும் வழங்குவதன் மூலம், 2025 வரை 12% வட்டியும், அதன் பிறகு 9% வட்டியும் வழங்கப்படவுள்ளது.

இந்த தீர்மானத்தின் ஊடாக உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்டு தீர்ப்பளிக்குமாறு கோரி ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவரும், நிதி ஆய்வாளருமான சதுரங்க அபேசிங்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த, விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...