மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த மாணவி: நீதிமன்றத்தின் உத்தரவு

Date:

மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கெக்கிராவ நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், மாணவி தொடர்பில் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த 14 வயது மாணவி தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலைக்கு முன்பதாக போக்குவரத்து கடமையில் ஈடுக்கப்பட்டிருந்த பொலிஸார் மாணவி மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளிப்பதை கண்டறிந்துள்ளனர்.

பொலிஸாரின் தற்போதைய விசாரணையில் மாணவியின் தாயின் இரண்டாவது கணவரின் தந்தையே இவ்வாறு மது அருந்துவதற்கு பழக்கப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...