முஸ்லிம் சமய திணைக்களம் துரித நடவடிக்கை!

Date:

குர்ஆன் மத்ரஸாக்களின் கற்றல்-கற்பித்தல் முறைகளைச் சீரமைப்பதில் முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் ஒரு பொதுவான பாடத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதுடன் இவ்விடத்தில் முஸ்லிம் அமைப்புகளின் கருத்துக்களைத் திரட்டுவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

பொதுவான பாடத்திட்டத்தின் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பதை இயக்க ரீதியான அமைப்புக்கள் முன்மொழிய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் மதரஸாக்களுக்குப் பொதுவான பாடத்திட்டம் தொடர்பில் இயக்க ரீதியான அமைப்புக்களின் கருத்துக்களை பெறுவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகத்தில் திணைக்களம் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மீலாத் நிகழ்வினையடுத்து இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...