அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய நடவடிக்கை

Date:

நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி வழங்கப்படவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையிலும், வைத்தியர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும் இலங்கையில் முதலாவது அரச சார்பற்ற மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சில வைத்தியர்கள் வெளிநாட்டில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தெரிவுசெய்யும் அதேவேளை, நாட்டில் உள்ள மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்தார். இந்த சவாலை எதிர்கொள்ள மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவது ஒரு முக்கியமான உத்தி என்று அவர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...