வெலிகம சம்பவத்தை வஹ்ஹாபிய தீவிரவாதமாகக் காட்ட சிங்கள ஊடகம் முனைப்பு

Date:

வெலிகம கல்பொக்க புஹாரி ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த வெள்ளியன்று (15) ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெற்ற கைகலப்பினை வஹ்ஹாபிய தீவிரவாதப் பிரச்சினையாகச் சித்திரிக்கும் வகையில் சிங்கள ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெலிகாமம் கல்பொக்கையில் மாப்பிள்ளை ஆலிம் (ரஹ்) அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட மத்ரஸாவுக்குப் பக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புஹாரி பள்ளிவாசலிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அரூஸியதுல் காதிரியா தரீக்காவைச் சேர்ந்தவர்களதும் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களதும் செயற்பாடுகள் இந்தப் பள்ளிவாசலில் ஒன்றாக நடைபெற்று வந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து வருகை தந்த உலமா ஒருவர் நடத்திய குத்பா பிரசங்கத்துக்குப் பின்னர் அறிவித்தல் வாசிப்பதில் எழுந்த பிரச்சினையினால் குறித்த இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதங்கள் எழுந்து கைகலப்பாக மாறியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வெலிகம பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பிரதாய முஸ்லிம்களுக்கும் வஹாப்வாதிகளுக்கும் இடையிலான பிரச்சினையாக இதனை ஊதிப் பெருப்பிக்கும் வேலையை சிங்கள ஊடகமொன்று முன்னெடுத்து வருவது குறித்து முஸ்லிம் சமூகத்தில் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று திவயின பத்திரிகையில்…..

 

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...