அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய நடவடிக்கை

Date:

நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி வழங்கப்படவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையிலும், வைத்தியர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும் இலங்கையில் முதலாவது அரச சார்பற்ற மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சில வைத்தியர்கள் வெளிநாட்டில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தெரிவுசெய்யும் அதேவேளை, நாட்டில் உள்ள மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்தார். இந்த சவாலை எதிர்கொள்ள மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவது ஒரு முக்கியமான உத்தி என்று அவர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...