தென்கொரியாவில் AI பயிற்சி நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை ஊடகவியலாளர்கள்

Date:

தென்கொரியாவில் இலங்கை ஊடகவியலாளர்கள்  AI தொடர்பான பயிற்சி நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கையில் ஊடகத்துறைக்கு செயற்றை நுண்ணறிவினை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறியொன்று தென்கொரியாவில் இரண்டு வாரங்களாக நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர்கள் 15 பேர் குறித்த பயிற்சி நெறியில் பங்குபற்றினர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட மூன்று தலைப்புகளில் மூன்று செயற்பாட்டு திட்டங்களும் அவர்களால் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டது.

கொய்க்கா நிறுவனமும், தென்கொரியாவின் ஹெங்யாங் பல்கலைக்கழகமும் இணைந்து முன்னெடுத்த இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு தென் கொரியாவின் உயர் ஊடக கலாச்சாரம் தொடர்பில் சிறந்த அனுபவங்களை பெற்றுக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதேபோன்று தென்கொரியாவின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பிலும் குறித்த ஊடகவியலாளர்கள் அறிந்து கொண்டனர்.

பயிற்சி நெறியின் இறுதியில் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன அவர்களின் தலைமையில் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் அர்ப்பணிப்பினால் இந்த பயிற்சி நெறியினை தொடர்வதற்கு அவ் ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...