பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Date:

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் தீர்மானத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விசாரணைக்காக பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மேலும் மேற்படி விசாரணை முடியும் வரை பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது என தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு தேவையான வரியை செலுத்தாமல் தங்க நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசியை கொண்டு வந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...