லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு!

Date:

லிட்ரோ எரிவாயுவின் விலையில் நாளை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த வருடம் இலங்கையில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் நான்காம் திகதி இடம்பெற்ற எரிவாயு விலை திருத்தத்தில், விலை அதிகரிக்கப்படவிருந்த போதிலும், நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு விலையை திருத்தாமல் இருக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2,982 ரூபாய்க்கும், ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டர் 1,198 ரூபாய்க்கும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 561 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...