அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய நடவடிக்கை

Date:

நாட்டில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி வழங்கப்படவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையிலும், வைத்தியர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும் இலங்கையில் முதலாவது அரச சார்பற்ற மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சில வைத்தியர்கள் வெளிநாட்டில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தெரிவுசெய்யும் அதேவேளை, நாட்டில் உள்ள மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்தார். இந்த சவாலை எதிர்கொள்ள மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவது ஒரு முக்கியமான உத்தி என்று அவர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...