என்ஜியோகிராம் இயந்திரம் இல்லாததன் காரணமாக மாரடைப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

என்ஜியோகிராம் இயந்திரம் இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஊவா மாகாணத்திலுள்ள 1.5 மில்லியன் மக்கள் இந்த சேவையினை பெற்றுக்கொள்வதாயின் கண்டி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நாளொன்றுக்கு பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக ஆதரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 170 இருதய நோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் கோத்தாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...