இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சரை சந்திக்க தமிழ் எம்.பிக்கள் முயற்சி

Date:

இலங்கைக்கு  உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க தமிழ் கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கின் ஏனைய கட்சிகளும் தெற்கின் சில தமிழ் கட்சிகளும் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க நேரத்தை கோரியுள்ளன.

என்றாலும், இம்முறை ‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ளவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளதுடன், அவரது நேர அட்டவணையும் இறுக்கமாக உள்ளது.

இன்றையை தினம் ‘IORA’ மாநாட்டில் கலந்துகொள்ளும் எஸ்.ஜெய்சங்கர் பிற்பகல் மற்றும் மாலை வேளையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

நாளைய தினம் திருகோணமலையில் பல்வேறு நிகழ்வுகளில் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளதுடன், மாலை இந்தியா திரும்பவும் உள்ளார்.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...