பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அபகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபையின் மத்தியில் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு “அடிக்காதே, அடிக்காதே, எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு, எங்களைத் தாக்குவதை நிறுத்துங்கள், எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பி கொடுங்கள் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பார் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த அறிவித்ததையடுத்து கூட்டமைப்பு எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...