மாத்தறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை அறிவிப்பு!

Date:

மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோரின் தலைமையில் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் கடந்த 05 மற்றும் 06ம் திகதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...