கொழும்பில் குண்டு தாக்குதல் திட்டம் உண்மையா, பொய்யா? கேள்வி எழுப்பிய சஜித்

Date:

கொழும்பில்  முக்கியமான இடங்களில் குண்டு தாக்குதலை நடத்த திட்டம் என்ற தலைமைப்பின் அரச பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் சரியான முறையில் தெளிவுப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரியவருகிறது.

இது மிகவும் பாரதூரமான விடயம் என்பதால், அதில் உண்மை, பொய் சம்பந்தாமாக மேலதிக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்க முடியாது என்பதால், கடந்த கால பாடங்களை கற்று ஆபத்து குறித்து தேடிப்பாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக நாட்டின் சட்டத்திற்குள் எடுக்க வேண்டிய உச்சப்பட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...