மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது!

Date:

புனித அல் குர்ஆனுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டமைக்காக யூ டியூப் பதிவாளரும் பிரபல ஜோதிடருமான இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக கொழும்பு – 02 இல் வசிக்கும் என்.எம்.தாஜுடீன் உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

29 செப்டம்பர் 2023 அன்று யூ ட்யூப் சேனலில் இந்த அவதூறான கருத்துக்களை இந்திக்கத் தொட்டவத்த பதிவேற்றியுள்ளார்.

இதன்படி இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 120, 291A, 291B மற்றும் ICCPR சட்டத்தின் மற்றும் 3(2) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...