மாத்தறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை அறிவிப்பு!

Date:

மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோரின் தலைமையில் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் கடந்த 05 மற்றும் 06ம் திகதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...