அரேபியர்களை சிறுமைப்படுத்துவது மனித குலத்திற்கு எதிரான குற்றம்- மகாத்மா காந்தி

Date:

தற்போது மிகமோசமான முறையில் நடந்துகொண்டிருக்கின்ற இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தம் தொடர்பில் மேற்குல நாடுகளும் இந்திய அரசு சார்ந்த ஊடகங்களும் பலஸ்தீன் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்தியாவின் தலைவர்கள் ஆரம்பகாலம் முதல் பலஸ்தீனுக்கு ஆதரவாகவே இருந்தார்கள் என்பதை காட்டுகின்ற ஒரு செய்திக்குறிப்பை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்குச் சொந்தமானதோ பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானதோ அவ்வாறுதான் பலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தம்.

அரேபியர்கள் மீது யூதர்களைத் திணிப்பது தவறானது என்பதோடு மனிதாபிமானமற்ற செயலுமாகும். பலஸ்தீனத்தில் இன்று நடக்கும் விடயங்களை எந்தவொரு தார்மீகவாதியாலும் நியாப்படுத்த முடியாது பலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ யூதர்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ள வைத்துவிட்டு பெருமைக்குரிய அரேபியர்களை சிறுமைப்படுத்துவது நிச்சயம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக தொடர்ந்து நீடிக்கும்.

மகாத்மா காந்தி -ஹரிஜன் இதழ் -1938

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...