இணையத்தள பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்தும் சாத்தியம்!

Date:

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தள பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்டமூலத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக கட்டுப்பாடுகளை விதிப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தள பாவனையாளர்கள் மற்றும் இதில் தமது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுபவர்களின் கருத்துச் சுதந்திரத்தை உத்தேச சட்டமூலம் கட்டுப்படுத்துவதாக உள்ளது. இந்தச் சட்டமூலம் அரசியல் நோக்கங்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...