ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக்கொடி: மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு!

Date:

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், புனித ஸ்தலங்களிலும் கறுப்புக்கொடி ஏற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இதனை நடைமுறைப்படுத்துமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நாளை போயா தினத்தன்று (28) இரவு 7.00 மணி முதல் 7.30 மணி வரை அரை மணி நேரம் மின் விளக்குகளை அணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்த அரை மணி நேரம் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை தெரிவிக்குமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் வரும் முதல் புதன்கிழமை கொழும்பு – குருநாகல் பஹ வீதியில் திவுலப்பிட்டி பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 8.00 மணிக்கு மின் பாவனையாளர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு பேரணியை ஆரம்பிக்கவுள்ளன.

 

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...