கொழும்பில் குண்டு தாக்குதல் திட்டம் உண்மையா, பொய்யா? கேள்வி எழுப்பிய சஜித்

Date:

கொழும்பில்  முக்கியமான இடங்களில் குண்டு தாக்குதலை நடத்த திட்டம் என்ற தலைமைப்பின் அரச பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் சரியான முறையில் தெளிவுப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரியவருகிறது.

இது மிகவும் பாரதூரமான விடயம் என்பதால், அதில் உண்மை, பொய் சம்பந்தாமாக மேலதிக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்க முடியாது என்பதால், கடந்த கால பாடங்களை கற்று ஆபத்து குறித்து தேடிப்பாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக நாட்டின் சட்டத்திற்குள் எடுக்க வேண்டிய உச்சப்பட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...