கொழும்பில் குண்டு தாக்குதல் திட்டம் உண்மையா, பொய்யா? கேள்வி எழுப்பிய சஜித்

Date:

கொழும்பில்  முக்கியமான இடங்களில் குண்டு தாக்குதலை நடத்த திட்டம் என்ற தலைமைப்பின் அரச பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் சரியான முறையில் தெளிவுப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரியவருகிறது.

இது மிகவும் பாரதூரமான விடயம் என்பதால், அதில் உண்மை, பொய் சம்பந்தாமாக மேலதிக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளிக்க முடியாது என்பதால், கடந்த கால பாடங்களை கற்று ஆபத்து குறித்து தேடிப்பாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக நாட்டின் சட்டத்திற்குள் எடுக்க வேண்டிய உச்சப்பட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...