செங்கோலை தொட்டமையினால் அஜித் மன்னப்பெருமவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகரினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, அஜித் மன்னப்பெரும இன்று முதல் நான்கு வாரங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வாய்மூல கேள்வி பதிலுக்காக நேரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்பட்ட அமைதி இன்மையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும செங்கோலை தொட்டமையினால் அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...