பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது.

மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அபகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபையின் மத்தியில் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலான எம்.பி.க்கள் குழு “அடிக்காதே, அடிக்காதே, எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு, எங்களைத் தாக்குவதை நிறுத்துங்கள், எங்கள் நிலங்களை எங்களிடம் திருப்பி கொடுங்கள் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பார் என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த அறிவித்ததையடுத்து கூட்டமைப்பு எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...