மாத்தறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை அறிவிப்பு!

Date:

மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோரின் தலைமையில் மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி சார் ஊழியர்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் கடந்த 05 மற்றும் 06ம் திகதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...