மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்!

Date:

இலங்கை மின்சார சபையை  மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபை பாரிய நட்டத்தில் இயங்குவதாக கடந்தகாலத்தில் பல தரப்பால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அதனை மறுசீரமைப்பதற்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

மின்சார சபையை எதிர்கொண்டுள்ள நஷ்டத்தை குறைக்கவும் மின்சார சபையின் இலாபத்தை அதிகரிக்கவும் மின் கட்டணம் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டன.

இவ்வாறான பின்புலத்திலேயே மின்சார சபையை மறுசீரமைப்புக்கும் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அடுத்தவாரம் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவற்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...