இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளை பதவி நீக்க விசேட கட்சித் தலைவர் கூட்டம்!

Date:

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்காக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் கோரியதையடுத்து, விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கான அமர்வுகளை இடைநிறுத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தீர்மானித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்த விசேட அறிக்கையை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முன்மொழிந்தார்.

அதன் பிரகாரம் விசேட கட்சித் தலைவர் கூட்டத்தை நடத்த பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...