இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போரைத் தாண்டி ‘பயங்கரவாதமாக’ மாறிவிட்டது: பிரான்சிஸ் போப் ஆண்டகை

Date:

காஸாவில் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய உறவினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் போப் ஆண்டகை தனித்தனியாக சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆராதனைக்குப் பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஸா பகுதியில் நிலவும் மோதல்களால் இரு தரப்பினரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தமக்கு நன்றாகவே புரிகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் போப் கூறியுள்ளார்

மேலும், காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல் போரைத் தாண்டி பயங்கரவாதமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போரை தாண்டி நாம் சென்றுவிட்டோம். இனி எப்போதும் இது போராக இருக்க முடியாது. இது பயங்கரவாதம்.

அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள், அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,  அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும், அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற பயங்கரவாத எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பீட்டர்ஸ் சதுக்கத்தில் பலஸ்தீன தேசிய கொடிகளை ஏந்தியும், மனிதப்படுகொலை யை எடுத்துரைக்கும் காஸா போர்க் காட்சிகள் கொண்ட பதாகைகளையும் பலரும் ஏந்தியிருந்தனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...