இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போரைத் தாண்டி ‘பயங்கரவாதமாக’ மாறிவிட்டது: பிரான்சிஸ் போப் ஆண்டகை

Date:

காஸாவில் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய உறவினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் போப் ஆண்டகை தனித்தனியாக சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆராதனைக்குப் பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஸா பகுதியில் நிலவும் மோதல்களால் இரு தரப்பினரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தமக்கு நன்றாகவே புரிகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் போப் கூறியுள்ளார்

மேலும், காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல் போரைத் தாண்டி பயங்கரவாதமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போரை தாண்டி நாம் சென்றுவிட்டோம். இனி எப்போதும் இது போராக இருக்க முடியாது. இது பயங்கரவாதம்.

அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள், அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,  அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும், அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற பயங்கரவாத எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பீட்டர்ஸ் சதுக்கத்தில் பலஸ்தீன தேசிய கொடிகளை ஏந்தியும், மனிதப்படுகொலை யை எடுத்துரைக்கும் காஸா போர்க் காட்சிகள் கொண்ட பதாகைகளையும் பலரும் ஏந்தியிருந்தனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...