மாணவர்களை கட்டாயப்படுத்தி பொலித்தீன் உறைகளை உண்ண வற்புறுத்திய அதிபருக்கு இடமாற்றம்: கல்வி அமைச்சர்

Date:

நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் சிலரை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு அதிபர் வற்புறுத்திய சம்பவத்தை அடுத்து, உடன் அமுலுக்கு வரும் வகையில், கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு வசதியாக அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை கட்டாயப்படுத்தி லஞ்ச் சீட்டுகளை உட்கொள்ள வைத்ததாக கூறப்படும் ரம்புக்பிட்டிய பிரதேச அதிபரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபர் கட்டாயப்படுத்தியதால் பொலித்தீன்களை உட்கொண்ட ஏழு மாணவர்களில் கடுமையாக சுகவீனமுற்ற இரு மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர்.

இந்தச் சம்பவம் மாணவர்களின் மதிய உணவு இடைவேளையின்போது இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில், சில மாணவர்கள் தங்கள் உணவை பொலித்தீன் மற்றும் பத்திரிகைத் தாள்களில் சுற்றி கொண்டு சென்றுள்ளனர். இதனைக் கண்ட அதிபர் அவற்றையும் உண்ணுமாறு மாணவர்களை வற்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது

இதனால் பாதிக்கப்பட்ட ஏழு மாணவர்களில் இரு மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே குறித்த பாடசாலையின் அதிபர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...