ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் 48 மணித்தியாலங்கள் நீடிக்கும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.