அஹதியா பரீட்சைக்காக ஜும்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளுமாறு திணைக்களம் வேண்டுகோள்!

Date:

2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை, 28 ஆம் 29 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் நடாத்தப்படவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக காணப்படுவதோடு, ஜும்ஆவுக்குப் பிறகும் பரீட்சை நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் குத்பாப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, பிற்பகல் 1 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறு, அன்றைய தினம் ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்தும் கதீப்மார்களுக்கு அறிவித்தல் செய்யுமாறு, அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடமும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

– ஐ. ஏ. காதிர் கான்

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...