‘செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் கஹடோவிட்டவில் மாணவர்களுக்கு விசேட செயலமர்வு

Date:

செயற்கை நுண்ணறிவும் எதிர்காலமும் (Artificial Inteligence and Future) எனும் தலைப்பில் மாணவர்களை அறிவுறுத்தும் செயலமர்வொன்று கஹடோவிட்டயில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வினை பஹன மீடியா எகடமி ஏற்பாடு செய்திருந்தது.

கஹடோவிட்ட இமாம் ஷாபிஈ நிலையத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பிரதேசத்தின் 03 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்திய மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
‘நியூஸ் நவ்’ இணையத்தள பிரதம ஆசிரியர் பியாஸ் மொஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பிரதான விரிவுரையினை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் தென் கொரியாவில் இரு வார பயிற்சி பெற்ற, அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக அதிகாரியாக கடமை புரியும் எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.
இவர் ஊடகத் துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...