காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சி: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Date:

காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சித்து வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

காஸாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்காத இஸ்ரேல், காஸா மக்களைப் பட்டினியால் கொல்ல முயற்சித்து வருகிறது. இது ஒரு போர் குற்றமாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.

தண்ணீர், உணவு, எரிபொருள், மருந்துபொருட்கள் உட்பட மனிதநேய உதவிகள் காஸா பகுதிக்குள் போதுமான அளவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

விளைநிலங்கள் உட்பட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இஸ்ரேல் இராணுவம் அழித்துவருகிறது.

நான்காவது ஜெனீவா உடன்படிக்கையின் படி காஸாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் மற்றும் உதவிகளை வழங்க வேண்டியது பலஸ்தீனத்தை ஆக்கிரமித்திற்கும் இஸ்ரேலின் பொறுப்பு என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களின் பட்டினியை மனதில் கொண்டு இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இஸ்ரேல்,மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, யூதர்களுக்கு எதிரான அமைப்பு எனவும் காஸா மீதான போரை நிறுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...