மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

Date:

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும், மாலைதீவு தரப்பினர் ஒப்பந்த வரைபுக்கு பின்னர் ஒரு சில மேலதிக திருத்தங்களை முன்மொழிந்து, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இருந்தனர்.

பின்னர் இருதரப்பின் உடன்பாடுகளுக்கமைய திருத்தப்பட்ட புதிய ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னர் ஒப்பந்தத்தை இருநாடுகளின் இராஜதந்திர தூதுக்குழுவால் ஏற்று அங்கீகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...