அஹதியா பரீட்சைக்காக ஜும்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளுமாறு திணைக்களம் வேண்டுகோள்!

Date:

2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை, 28 ஆம் 29 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் நடாத்தப்படவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக காணப்படுவதோடு, ஜும்ஆவுக்குப் பிறகும் பரீட்சை நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் குத்பாப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, பிற்பகல் 1 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறு, அன்றைய தினம் ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்தும் கதீப்மார்களுக்கு அறிவித்தல் செய்யுமாறு, அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடமும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

– ஐ. ஏ. காதிர் கான்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...