காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சி: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Date:

காஸா மக்களை பட்டினியால் அழிக்க இஸ்ரேல் முயற்சித்து வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

காஸாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்காத இஸ்ரேல், காஸா மக்களைப் பட்டினியால் கொல்ல முயற்சித்து வருகிறது. இது ஒரு போர் குற்றமாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.

தண்ணீர், உணவு, எரிபொருள், மருந்துபொருட்கள் உட்பட மனிதநேய உதவிகள் காஸா பகுதிக்குள் போதுமான அளவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

விளைநிலங்கள் உட்பட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இஸ்ரேல் இராணுவம் அழித்துவருகிறது.

நான்காவது ஜெனீவா உடன்படிக்கையின் படி காஸாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் மற்றும் உதவிகளை வழங்க வேண்டியது பலஸ்தீனத்தை ஆக்கிரமித்திற்கும் இஸ்ரேலின் பொறுப்பு என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களின் பட்டினியை மனதில் கொண்டு இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இஸ்ரேல்,மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, யூதர்களுக்கு எதிரான அமைப்பு எனவும் காஸா மீதான போரை நிறுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...