தாய்லாந்து வெள்ளத்தில் அறுவர் உயிரிழப்பு: பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு

Date:

தாய்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் பெய்து கனமழை காரணமாக கடந்த 22ஆம் திகதி முதல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சத்துன், சொங்க்லா, பட்டாணி, யாலா, நராத்திவாட் ஆகிய தென் மாநிலங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

நராத்திவாட் மாநிலத்தில் 89 வயதான பெண்மணி, ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல நாட்கள் நீடித்த கனமழை வெள்ளத்தில் சிக்கி மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வீதிகள் சேற்றில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் வீடுகளின் கூரைகளில் இருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.

இன்று (27) வெள்ள நீரின் அளவு குறைந்துள்ளதாக தாய்லாந்து அனர்த்த தடுப்பு மற்றும் மீட்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...