முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் மனைவி காலமானார்

Date:

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்களின் அன்பு மனைவி சித்தி ஆப்தீன் காலமானார். இவர் பிரபல வர்த்தகர் பஸால் ஆப்தீனின் தாயாராவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.30 மணிக்கு நாரஹேன்பிட்ட, ஸ்ரீ சத்தாராம மாவத்தை, (நாவல வீதி) இல: 175/ 5 என்னும் விலாசத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஜாவத்தை ஜும்ஆ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு ஜன்னதுல் பிரதௌஸ் கிடைப்பதற்காக பிரார்த்திக்கின்றோம். முன்னால் பொலிஸ் அத்தியட்சகர் ஆப்தீன் அவர்கள் ஜே.ஆர் ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் கபூரியா அரபுக் கல்லூரியை அரசாங்கத்தல் சுவீகரிக்க முற்பட்ட போது அதனை பாதுகாக்க முன்னின்று செயல்பட்டவராவார்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...