அஹதியா பரீட்சைக்காக ஜும்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளுமாறு திணைக்களம் வேண்டுகோள்!

Date:

2023 ஆம் ஆண்டிற்கான அஹதிய்யாப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை, 28 ஆம் 29 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் நடாத்தப்படவுள்ளதாக, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினமாக காணப்படுவதோடு, ஜும்ஆவுக்குப் பிறகும் பரீட்சை நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் குத்பாப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, பிற்பகல் 1 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்ளுமாறு, அன்றைய தினம் ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்தும் கதீப்மார்களுக்கு அறிவித்தல் செய்யுமாறு, அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடமும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

– ஐ. ஏ. காதிர் கான்

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...