கராத்தே போட்டியில் புத்தளம் பாடசாலை மாணவர்கள் வெற்றி!

Date:

வயம்ப பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) கராத்தே சுற்றுப் போட்டியில் புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

21 வயதிற்குட்பட்ட கராத்தே மற்றும் குமித்தே ஆகிய இரு போட்டிகளிலும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் ஏ.எம்.அஸாம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

14 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் மதுரங்குளி எக்ஸெலன்ஸ் ஆங்கில பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் யூ. தாமீர் தங்கப் பதக்கத்தையும், புத்தளம் காஸிம் சிட்டி பாடசாலை மாணவன் மாஷின் அஹ்மத், 15 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இந்த மாணவர்களை “டபில்யூ.எஸ்.கே.ஏ.” கழகத்தின் கராத்தே பிரதான போதனாசிரியரான சிஹான் எம். பைரோஸ் பயிற்றுவித்திருந்தார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...