சவூதி அரேபியா விரைவில் இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கும்!

Date:

சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை இயக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அமைச்சர், விமானங்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சவூதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் கூட்டத்தில் உறுதியளித்தார்.

பல்வேறு நாடுகளுடனான வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே தமது விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்ததாக தெரிவித்தார்.

“எயார் சீனா, மலிண்டோ ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், ஏர் சீஷெல்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமானங்களை இலங்கைக்கு இயக்க முடிந்தது,” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...