சவூதி அரேபியா விரைவில் இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கும்!

Date:

சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை இயக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அமைச்சர், விமானங்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சவூதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் கூட்டத்தில் உறுதியளித்தார்.

பல்வேறு நாடுகளுடனான வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே தமது விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்ததாக தெரிவித்தார்.

“எயார் சீனா, மலிண்டோ ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், ஏர் சீஷெல்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமானங்களை இலங்கைக்கு இயக்க முடிந்தது,” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...