மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

Date:

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும், மாலைதீவு தரப்பினர் ஒப்பந்த வரைபுக்கு பின்னர் ஒரு சில மேலதிக திருத்தங்களை முன்மொழிந்து, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இருந்தனர்.

பின்னர் இருதரப்பின் உடன்பாடுகளுக்கமைய திருத்தப்பட்ட புதிய ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னர் ஒப்பந்தத்தை இருநாடுகளின் இராஜதந்திர தூதுக்குழுவால் ஏற்று அங்கீகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...