அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு: ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தனது சுவிட்சர்லாந்து விஜயத்தை தொடர்ந்து அங்கிருந்து உகண்டாவிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 13 ஆம் திகதி அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு சுவிட்சர்லாந்து பயணமானார்.

அவரது உத்தியோகபூர்வ விஜயம் 12 நாட்களைக் கொண்டதாக அமையுமென என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீவிரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் உகாண்டாவின் கம்பாலாவில் 19 ஆவது அணிசேரா நாடுகளின் (NAM) உச்சி மாநாடு திங்கட்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...